Posts

Showing posts with the label நடைபாதை

திரு திரு திரு பாகம் மூன்று

Image
                         காலை ஐந்து மணி அளவில் குளித்துவிட்டு, குளம்பி பருகிவிட்டு ஸ்ரீ வாரி மெட்டு செல்லும் பேருந்தில் பயணமானோம். இருபது அல்லது முப்பது நிமிட பயணம் தான். தேவஸ்தான இலவச பேருந்து வசதியும் உள்ளது. போகும் வழியிலேயே ஐந்து மணிநேர நடைபயண இடத்தில் சில பேர் இறங்கிக்கொண்டனர். அந்த வழி அதிகமான படிகட்டுகள் இல்லாமல் இருப்பதனால் அந்த வழியை சிலர் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.                          பேருந்தை விட்டு இறங்கியவுடன் அந்த இடம் நன்றாக இருந்தது. மலை வழி என்பதனால் சில்லென காலநிலை இருந்தது. குளிர்ந்த காலநிலை மனதிற்கு இதமளித்தது. சீக்கிரமாக தரிசித்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லவேண்டும் என்பதனால் சட சடவென நடக்க ஆரம்பித்தோம்.                                                                      கம்பி வேலியினுள்ளே பூங்கா போன்று அமைத்து ஒரு பெரிய சிவன் சிலையை நிருவியுள்ளனர்.   முதல் படி ஆரம்பிப்பதற்கு கடவுளை வணங்கிவிட்டு செல்ல பூஜை செய்கின்றனர். மொத்தம் 2400 படிகள். எண்ணிக்கையில் மலைப்பாக இருந்தது. ஆனால் உடன் பேசிக்கொண்டு செல்ல நண்பர்கள் அல்லது குடும்