ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஐந்து
பாதாள கோவில் அடுத்து சென்றது தாமரை மஹால். இந்த கட்டிடத்தின் வடிவம் தாமரை பூ போன்ற அமைப்பைப் பெற்றது. இந்த மஹால் என்பது இளவரசி குளிப்பதற்காக கட்டிய அரண்மனையாகும். உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை. பச்சை புல்வெளியில் மிக நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடடம் சுண்ணாம்பு கலவைக்கொண்டு கட்டப்பட்டது. எப்போதும் போல கட்டிடத்தின் சுவற்றில் காதல் கிறுக்கல்கள். தாமரை இலை போன்று அமைக்கப்பட்டு தண்ணீர் அதனைச்சுற்றி இருக்கும்படி வடிவமைத்துள்ளனர். யானை மண்டபம்: ராணி மண்டபத்திர்க்கு அருகிலேயே யானைகள் இளைப்பார ஒரு மண்டபம் அமைத்துள்ளனர். மிக நீளமான மண்டபம். ஒவ்வொரு கூடமும் ஒரு யானை தங்கும் அளவு அமைத்துள்ளனர். பள்ளி மாணவர்களுக்கு வரலாற்று சுற்றுலா கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். சில வெளிநாட்டவர்கள் அங்கொன்று இங்கொன்றுமாக இருந்தனர். அதன் பிறகு சென்றது ஒரு கோவில். சிலைகள் அனைத்தும் புராண கதைகள் சொல்கிறது. புகைப்படம் எடுத்துக்கொ