Posts

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

Image
                      தாமரை மஹால் அடுத்து சென்ற இடம் ஹசார ராமா கோவில். இந்த கோவிலைப் பற்றி நான் இந்த பயணத்தின் ஆரம்பத்திலேயே சிறு குறிப்பு ஒன்று கூறியிருந்தேன். அது என்னவென்றால் ஓர் திரைப்பட பாடலில் இந்த ஹம்பி பகுதியின் அனைத்து இடங்களையும் காண்பித்திருப்பார்கள் என்று. அது "என் சுவாச காற்றே" படத்தில் இருந்து "தீண்டாய்" பாடல்.       ராஜா தர்பார் நடத்துவதற்காக மிகப் பெரிய அரண்மனையைக் கட்டியிருக்கிறார்கள். ராஜா, மந்திரிகள், அவை பெரியோர்கள் அமருவதற்காக மிக நீளமான மற்றும் அகலமான மேடை போன்று அமைத்துள்ளார்.              அங்கிருந்து சற்று அருகில் நீர் சேகரிப்பதற்காக மிகப் பெரிய குளம் ஒன்றை மிக திட்டமிடலுடன் அமைத்துள்ளனர்.   ஓர் தந்தத்தை இழந்த யானையை மிக மெதுவாக விரல்களால் சுண்டினால் ஸ்வரங்கள் மீட்டுகின்றன.       மேலே உள்ள காணொளியில் மூன்று விதமான கற்கள் உலோகங்களால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கல்லினை சுண்டும்போதும் ஒவ்வொரு சப்தங்களை எழுப்புகின்றன. இந்த விஷயமெல்லாம் நாங்கள் சுற்றுலா வழிகாட்டியை நாடியதால் தெரிய முடிந்தது.                 

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஐந்து

Image
                                   பாதாள கோவில் அடுத்து சென்றது தாமரை மஹால். இந்த கட்டிடத்தின் வடிவம் தாமரை பூ போன்ற அமைப்பைப் பெற்றது. இந்த மஹால் என்பது இளவரசி குளிப்பதற்காக கட்டிய அரண்மனையாகும். உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை.                                              பச்சை புல்வெளியில் மிக நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கட்டிடடம் சுண்ணாம்பு கலவைக்கொண்டு கட்டப்பட்டது. எப்போதும் போல கட்டிடத்தின் சுவற்றில் காதல் கிறுக்கல்கள். தாமரை இலை போன்று அமைக்கப்பட்டு தண்ணீர் அதனைச்சுற்றி இருக்கும்படி வடிவமைத்துள்ளனர்.     யானை மண்டபம்:                                  ராணி மண்டபத்திர்க்கு அருகிலேயே யானைகள் இளைப்பார ஒரு மண்டபம் அமைத்துள்ளனர். மிக நீளமான மண்டபம். ஒவ்வொரு கூடமும் ஒரு யானை தங்கும் அளவு அமைத்துள்ளனர்.    பள்ளி மாணவர்களுக்கு வரலாற்று சுற்றுலா கூட்டிக்கொண்டு வந்திருந்தனர். சில வெளிநாட்டவர்கள் அங்கொன்று இங்கொன்றுமாக இருந்தனர்.        அதன் பிறகு சென்றது ஒரு கோவில். சிலைகள் அனைத்தும் புராண கதைகள் சொல்கிறது. புகைப்படம் எடுத்துக்கொ

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி நான்கு

Image
                            விருபாகஷா கோவிலிற்கு அருகில் ஒரு இரண்டு அல்லது நான்கு km தொலைவில் "கடாலே களு கணேசா" மண்டபம் போன்று ஒரு இடத்திருக்கு சென்றோம். வெயில் மிக அதிகமாக இருந்ததனால் சுற்றுலா பயணிகள் குறைவானவர்களாகவே இருந்தார்கள்.                   அங்கிருந்து அடுத்து சென்றது "லக்ஷ்மி நரசிம்ஹா விக்ரஹா". இந்த சிலை கர்நாடக மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்களில் இந்த சிலையின் ஓவியத்தைப் பார்க்கலாம். இந்த சிலையின் வரலாறு விக்கிபீடியாவில் தெரிந்துகொள்ளலாம்.     இதற்கு அருகிலேயே நீரில் எப்போதும் சூழ்ந்துள்ள சிவலிங்கம் ஒன்று உள்ளது.  அதற்கு அடுத்தது சென்றது பாதாள கோவில். பராமரிப்பு என்பது UNESCO மூலம் நடக்கிறது. அவ்வளவே. மற்றபடி பூஜை என்பதெல்லாம் கிடையாது. ***********************************************(தொடரும்)*************** (தங்களின் பின்னூட்டத்தை எதிர்பார்க்கும் திசைதென்றல்)

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி மூன்று

Image
                                              பனிரெண்டு நபர்கள் அமரும் வண்டி.. ஏழு நபர்கள் மட்டுமே பயணித்தோம். அதுவே எங்களுக்கு வசதியாக இருந்தது. எங்களுடன் அந்த சுற்றுலா மைய அதிகாரியும் இணைந்து கொண்டார்.                             போகும் வழியில் இன்னொரு சுற்றுலா வழிகாட்டி ஏறிக்கொண்டார். சுற்றுலா மைய அதிகாரி போகும் வழியில் இறங்கிக்கொண்டார். சுற்றுலா வழிகாட்டி தமிழ் மற்றும் கன்னடா மொழி பேசிக்கொண்டு வந்தார். அவர் பேசும் தமிழ் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. முதலில் பார்க்கச் சென்றது விருபாக்சா கோவில்.                        பழமையான கோவில். பார்க்கும்போது தெரிந்தது. சிறிது சிதிலம் அடைந்திருந்தது. வெளியே புகைப்படக் கருவிக்கு கட்டணம் உண்டு. வழிகாட்டி கோவிலின் சிறப்பை விவரித்துக்கொண்டே வந்தார்.          வெளிநாட்டவர் இருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். World Heritage Temples என முதலில் வரும் வரிசைப்படி ஹம்பி வந்துவிடுகிறார்கள் போல. நான்கு, ஐந்து பேர் காண முடிந்தது. நல்ல வெயில்.            கோவிலின் உட்ப்ரகாரத்தில் ஓர் இடத்தில் எங்களை நிறுத்தினார் வழி